அந்தியூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளருக்கு காலை உணவு

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம் அந்தியூர் சிறப்பு நிலை பேரூராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் எம்எல்ஏ, பேரூராட்சி தலைவர் த எம் பாண்டியம்மாள், துணைத் தலைவர் திரு பழனிச்சாமி மற்றும் செயல் அலுவலர், மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி