சோதனையில், அவரிடம் 2 கிலோ எடையுள்ள கஞ்சா பெட்டலம் இருந்ததும், அவர் சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுக்கா காவேரிபுரம் அருகே உள்ள கருங்கல்நூர் சத்யாநகரைச சேர்ந்த தங்கமணி மகன் பிரகாஷ் (வயது 21) என்பதும், ஜேசிபி டிரைவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், இவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து கஞ்சாவை அந்தியூர் பர்கூர் வழியாக சேலம் மாவட்டம் மேட்டூர் காவேரிபுரம் மேட்டுபாளையூரைச் சேர்ந்த மகாராஜா (வயது 42) என்பவரிடம் விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் பிரகாஷை கைது செய்து, அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.