இந்நிலையில் தாளவாடியில் இருந்து ஆசனூர் செல்லும் ரோட்டில் கும்டாபுரம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சாலையில் உலா வந்தது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி கரும்பு உள்ளதா என தேடுவது தொடர்கதையாக மாறிவிட்டது. இதைக் கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை சற்று தூரத்திலேயே நிறுத்திக் கொண்டனர்.
கடந்த சில நாட்களாக கும்டாபுரம் சாலையில் முகாமிட்டுள்ள ஒற்றை யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.