ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வாரம் அனில் அம்பானி தொடா்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. யெஸ் வங்கியில் ரூ.3,000 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை நடக்கிறது.