அமலாக்கத்துறை விசாரணைக்கு ஏப்ரல் 8ஆம் தேதி ஆஜராகத் தவறியதால், காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை இன்று புதிய சம்மன் அனுப்பியுள்ளது. குருகிராமின் ஷிகோபூரில் நடந்த நில பேர வழக்கு தொடர்பான வழக்கில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த பரிவர்த்தனைகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.