தேர்தல் நடத்தை.. தமிழகத்தில் இதுவரை ரூ.462 கோடி பணம் பறிமுதல்

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உரிய ஆவணம் இல்லாத பணம் கைப்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரூ.462.74 கோடி மதிப்பிலான பணம், நகை உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் கருவூலத்தில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி