காங்கோ, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். இதன் காரணமாக, அங்கு நிலைமை மிகவும் கவலைக்கிடமாக மாறியுள்ளதை அடுத்து, உலக சுகாதார நிறுவனம் (WHO) அந்த நாடுகளுக்கு சர்வதேச அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்கான தீவிர முன்னெச்சரிக்கை மற்றும் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.