கொல்கத்தா அருகே வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம்

கொல்கத்தா அருகே வங்காள விரிகுடாவில் இன்று (பிப். 25) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 6:10 மணியளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி