போதைப்பொருள் தடுப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டுகளை தெரிவித்துள்ளது. தமிழகத்திற்குள் போதைப்பொருள் நுழைவதை தடுக்க காவல்துறையினருக்கு உரிய பயிற்சிகள் வழங்கவும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழக்கில், தமிழ்நாட்டில் மட்டும்தான் மாவட்ட அளவில் போதை தடுப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.