திருச்சியில் நாளை டிரோன்கள் பறக்க தடை

முதலமைச்சர் விஜய் வருகையை முன்னிட்டு திருச்சியில் நாளை (ஜூன் 01) டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி திருச்சியில் நாளை டிரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரத்திக் தயாள் உத்தரவிட்டுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து டி.வி.எஸ். டோல்கேட் பழைய பால் பண்ணை, சத்திரம் பஸ் நிலையம் வழியாக திறந்தவேனில் நின்றபடி முதலமைச்சர் விஜய் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார். 

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி