திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் தற்போது நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவர், இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கி வரும் 'லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு' என்ற புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். அரசியல் பிரமுகரான சுப.வீரபாண்டியன் திரைப்படத்தில் இணைந்திருப்பது, திரையுலக வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.