கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் சுயமரியாதையை ஏற்படுத்தித் தந்துள்ளது என பல்லடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், "மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.30 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கொடுக்கிறோம். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மகளிருக்கும் இதுவரை தலா ரூ.28,000 தந்துள்ளோம். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,39,560 கோடி வங்கிக் கடன் வழங்கி உள்ளோம். திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி" என கூறினார்.