கடவுளை வைத்து அரசியல் செய்யாதீர்கள் - உச்ச நீதிமன்றம்

கடவுளை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு தொடர்பான வழக்கு விசாரணையில், "திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது தொடர்பான ஆய்வறிக்கையில் தெளிவில்லை. அரசியலமைப்பு பதவியில் உள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு கடவுளை வைத்து அரசியல் செய்யக் கூடாது. மத உணர்வுகளை மதிக்க வேண்டும்" என்று நீதிபதி கவாய் அறிவுறுத்தியுள்ளார்.

நன்றி: Puthiya Thalaimurai

தொடர்புடைய செய்தி