“தமிழகத்தை இருளில் தள்ளிய திமுக”.. நயினார் கண்டனம்

திமுக அரசுக்கு எதிராக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஆட்சிக்கு வருவதற்கு முன் ‘மாதந்தோறும் மின் கட்டணக் கணக்கீடு செய்வோம்’ என்று தேர்தல் வாக்குறுதியில் முழங்கிவிட்டு, ஆட்சி அரியணையில் அமர்ந்ததும் மின் கட்டணத்தைக் கிடுகிடுவென உயர்த்தி தமிழகத்தை இருளில் தள்ளிய விடியாத திமுக  அரசை வரும் தேர்தலில் தமிழக மக்கள் விரட்டியடிப்பர்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி