ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயிடம் திமுக புகார் மனு

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் சந்திக்கும் முன்பே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிய வேண்டும் என்று சிபிஐக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் கடிதம் அளித்துள்ளார். அந்த கடிதத்தில், கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையில் இடையூறு செய்ய ஆதவ் அர்ஜுனா முயற்சி செய்கிறார். சாட்சிகளை அச்சுறுத்தும் வகையிலும், விசாரணையை திசை திருப்பும் வகையில் ஆதவ் அர்ஜுனா பேச்சு உள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ஒருவரே சாட்சிகளை கலைக்கும் வகையில் பேசி வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி