பிறந்தநாளில் திமுக கவுன்சிலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டை நகராட்சியின் இரண்டாவது வார்டு கவுன்சிலரான குமாரவேலுக்கு இன்று (ஆக.01) பிறந்த நாள். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. பிறந்தநாளை இறந்த நாளாக மாறியது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் திமுகவினர் கலக்கத்தில் உள்ளனர். மேலும் குமாரவேலின் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.