முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஜூலை 31) சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவரது உடல் நலம் குறித்து விசாரித்தோம்” என்றார். திமுகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு, “முதலமைச்சரை சந்தித்தது அரசியல் கிடையாது. தேமுதிகவை உறுதிபடுத்துவதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம்” என்றார்.
நன்றி: சன் நியூஸ்