தேனியில் நேற்று (பிப்.8) நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, தவெக தொண்டர்கள் சிலர் இடையூறு செய்ததாக தெரிகிறது. இதனால் கொந்தளித்த நாதக தொண்டர்கள், தவெக கொடி கட்டிய காரின் கண்ணாடியை உடைத்துள்ளனர். மேலும், அதில் இருந்த நபரையும் தாக்க முயன்றதாக தெரிகிறது. உடனடியாக அங்கு வந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்தினர்.
நன்றி: பாலிமர்