தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான விக்ரம் சுகுமாரன் (51) நேற்று (ஜூன் 1) இரவு மாரடைப்பால் காலமானார். இவர் 'மதயானைக் கூட்டம்', 'இராவண கோட்டம்' ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஆடுகளம் திரைப்படத்தில் எழுத்தாளராகவும், இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பேருந்து ஏறிய போது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.