இம்முகாம் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியும், மாவட்ட மாற்றுத்திறனாளர்கள் நலஅலுவலகமும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது. இம்முகாமிற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். வேடசந்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயராணி முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளர்கள் நலஅலுவலர் சுவாமிநாதன், அரசு மருத்துவர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரமணி, வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வராணி, மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்துகொண்டனர்.
இம்முகாமில் புதியதாக அடையாளமிடும் அட்டை, உபகரணங்கள், அரசின் நலத்திட்டங்கள், உதவித்தொகை ஆகியவற்றையும் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டது. 109 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.