வேடசந்தூர்: குபேர வாராகி அம்மன் தேய்பிறை பஞ்சமி யாக வேள்வி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் புதுரோடு ஸ்ரீ மகாசக்தி குபேர வாராகி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி யாகவேள்வி பூஜைகள் நடந்தது. 16 வகையான மஞ்சள் பால் பன்னீர் மருதாணி சந்தனம் குங்குமம் என்று அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. வாராகி அம்மனுக்கு யாக கும்பநீர் அபிஷேகம் நடந்தது. புனிதநீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டு கோவில் சார்பாக அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜோதிடர் அவினாசி ஜோதிலிங்கம் சிங்கப்பூர் வாழ் அரசு அதிகாரி தமிழரசி கோவில் பூசாரிகள் சக்திவேல் தினகரன் மற்றும் கோவை மதுரை புதுக்கோட்டை கரூர் திண்டுக்கல் தூத்துக்குடி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி