வேடசந்தூர்: அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

வேடசந்தூர் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட நூற்பாலைகளில் உள்ளூர் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் சுமார் 40,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பணியில் பாதுகாப்பு மற்றும் இதர நல வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யவும், தாடிக்கொம்பு அருகே அகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சண்முகவேல் ஸ்பின்னிங் மில் தனியார் தொழிற்சாலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

தொழிற்சாலையில் நடைபெறும் உற்பத்தி பணிகள் குறித்து, தொழிற்சாலையின் பொது மேலாளர்  சுப்பிரமணியன் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் தனபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மற்றும் இதர தொழிலாளர் நலத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி