இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்தது. இதில் சிறுமி நியா மட்டும் லேசாக காயமடைந்தார். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்த சிறுமியை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என கூறிவிட்டு விலையை உயர்த்துவதா? - செல்வப்பெருந்தகை