வேடசந்தூர்: வெறி நாய் கடித்ததில் 12 ஆடுகள் பலி

குஜிலியம்பாறை தாலுகா கூம்பூர் ஊராட்சி பாம்புலுபட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன் வயது 48 விவசாயி. தனக்கு சொந்தமான தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்து இருவது செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். பக்ரீத் திருவிழாவை முன்னிட்டு ஆடுகள் நல்ல விலைக்கு விற்கும் என்பதால் செம்மறி ஆட்டுக்குட்டிகளை மட்டுமே வாங்கி வளர்த்து வந்துள்ளார். ஆட்டுக்கிடைக்குள் புகுந்த இரண்டு வெறி நாய்கள் ஆடுகளை கடித்து குதறியது. 

மொத்தமுள்ள 20 ஆடுகளில் 9 ஆடுகள் பலியாகின எட்டு ஆடுகள் காயம் அடைந்தன. இறந்த ஒன்பது ஆடுகளின் மதிப்பு 50,000 எனக் கூறப்படுகிறது. அதே ஊரைச் சேர்ந்த வேலுமணி என்பவர் தனது வீட்டில் கட்டி வைத்திருந்த ஆட்டுக்குட்டியை நாய்கள் கடித்து இழுத்துச் சென்று விட்டது. அதன் மதிப்பு 10,000 என்று கூறப்படுகிறது. அதே போல் நத்தக்காடு பழனிச்சாமி என்பவர் வீட்டின் முன்பாக கட்டி வைத்திருந்த மூன்று குட்டிகளை ஈன்ற ஆட்டை நாய்களால் கடித்து குதறியது. தொடர்ந்து அப்பகுதியில் வெறி நாய்களால் ஆடுகளை வளர்த்து வாழ்வாதாரம் நடத்தி வரும் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு தரப்பில் எந்த உதவிகளும் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தெரு நாய்கள் தொல்லையிலிருந்து ஆடு வளர்ப்பவர்களையும், ஆடுகளையும் காக்க வேண்டும் என்பதே அப்பகுதியினரின் வேண்டுகோளாக உள்ளது.

தொடர்புடைய செய்தி