இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதி முருகன் தலைமை வகித்தார். மாநில அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், முன்னாள் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விபிபி பரமசிவம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளரும், முன்னாள் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான தென்னம்பட்டி பழனிச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். வேடசந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜான்போஸ், வேடசந்தூர் பேரூர் செயலாளர் பாபுசேட், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் நிலா தண்டபாணி, பேரூர் ஜெயலலிதா பேரவை செயலாளர் பூக்கடை ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்
ஜெயிலுக்குள் கஞ்சா விற்பனை செய்த சிறை காவலர் சஸ்பெண்ட்