மஞ்சள் கிழங்கு, நாயுருவி, ஜாதிக்காய், மாசிக்காய், ஏலம், கிராம்பு உள்ளிட்ட 108 வகையான மூலிகை பொருட்கள் யாக குண்டத்தில் விட்டு ஹோமம் வளர்த்தனர். கோபால் பிள்ளை, சுப்பிரமணி தலைமையில் ஜப்பானியர்கள் யாக பூஜையில் கலந்து கொண்டனர். சிவாச்சாரியார்களுடன் ஜப்பானியர்களும் மந்திரங்கள் ஓதி வழிபாடு செய்தனர். இதில் 25 பெண்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கடந்த ஒரு மாதம் காலமாக தமிழ்நாட்டில் உள்ள சிவ பஞ்சபூத தலங்கள், அறுபடை வீடு முருகன் கோவில்கள் என ஆன்மீகப் பயணம் முடித்து பழனி வராகி கோயில், பூம்பாறை முருகன் கோயில், வடமதுரை சரபேஸ்வரர் மடம் ஆகியவற்றில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடத்தி வருகின்றனர். இதில் திருவாடுதுறை ஆதீனம், பழனி புலிப்பாணி ஆசிரமத்தை சார்ந்த சீடர்களான சிவாச்சாரியார்கள் இந்த யாக கெளரி பூஜைகளை ஜப்பானியருடன் இணைந்து நடத்தினர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்