வேடசந்தூர்: டீக்கடையில் குட்கா, புகையிலை விற்பனை.. வாலிபர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் டீக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கோபிநாத்(21) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 11 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி