அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ஓனில் முர்மு என்ற ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியிடம் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது ஓனில் முர்மு செல்போனை அவர்களிடம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் ஓனில் முர்முவை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதில் காயமடைந்த ஓனில் முர்மு மயங்கி விழுந்தார். இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த ஓனில் முர்முவை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு உள்ள சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.