தாடிக்கொம்பு அடுத்த மறவபட்டி புதூர் பகுதியில் உள்ள புனித சலேத் மாதா கோவில் 141வது ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் மாதாவின் பகல் தேர் பவனி நடந்தது. பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, முழங்காலிட்டு தேரை சுற்றி வந்து, அங்க பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.