திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் போக்குவரத்து காவல்துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்த பாலன், பணியின் போது கடந்த 09.04.2025 அன்று உயிரிழந்தார். இந்நிலையில், பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் கருணைத்தொகையான ரூ. 20,00,000/-க்கான காசோலையை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், பாலன் அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.