இந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான கண்காட்சி, ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை கண்காட்சிக்குத் தேவையான மலர்ச் செடிகளை உற்பத்தி செய்யும் பணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகின்றன.
திண்டுக்கல், கொடைக்கானல் தோட்டக் கலைத் துறை சார்பிலும், ரெட்டியார்சத்திரம் இந்தோ இஸ்ரோ காய்கனி மகத்துவ மையத்தின் சார்பிலும் மொத்தம் 3 இடங்களில் மலர்ச் செடிகள் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகின்றன.