வியாபாரிகள் போட்டிபோட்டுக் கொண்டு ஆடு, கோழிகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். சண்டைச் சேவல்களை மோதவிட்டுப் பார்த்து இளைஞர்கள் வாங்கிச் சென்றனர். நேற்றைய சந்தையில் 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ. 7,500 முதல் ரூ. 8,500 வரையிலும், செம்மறி ஆடு ரூ. 6,500 முதல் ரூ. 7,500 வரை விற்பனையானது. மேலும் ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ. 400 இருந்து ரூ. 450 வரையிலும், சண்டைச் சேவல்கள் ரூ. 20 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் பொங்கலை முன்னிட்டு வரும் திங்கட்கிழமை சிறப்புச் சந்தை நடைபெறும் என்றும், அன்றைய தினம் ஆடு, கோழிகளின் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.
மாணவர்களுக்கான கல்விக்கடன் ரத்து செய்யப்படும் - நாதக அறிவிப்பு