திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, கொல்லப்பட்டி பிரிவு அருகே திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற மூன்று கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.