ஒரு சில கடைகளில் கோதுமை கிடைக்கவில்லை என்ற புகார் வந்தவுடன் உடனடியாக ரேஷன் கடைகளுக்கு கோதுமை அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் அதிகாரிகளுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருள் விரைவாக செல்வதை உறுதி செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வீட்டிற்கு ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் தற்போதைக்கு திட்டம் செயல்படுத்த வாய்ப்பில்லை எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனை பெற்று வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு