அவர் தான் குடியிருந்த வீட்டை அடகு வைத்துக் கட்சிப் பணிக்காகவும் விடுதலைப் போராட்டத்திற்காகவும் செலவு செய்தார். கடனை அடைக்க முடியாமல் வீடு ஏலத்திற்கு வருகையில் அவரது ஆதரவாளர்கள் சிலர் வீட்டை மீட்டுள்ளனர். அதை அஞ்சலை பெயரில் எழுதி வைத்தால் மீண்டும் அடகு வைத்துச் செலவு செய்து விடுவார் என்பதால் அவரது மூத்த மகன் காந்தி மற்றும் இளைய மகன் ஜெயவீரன் பெயரில் எழுதி வைத்தனர்.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜா, மாவட்டத் துணைச் செயலாளர் விஜய் சிவா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலன், நகரத் தலைவர் மிதுன் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.