பழனியில் உலக நன்மைக்காக நடைபெற்று வரும் மகா யாக விழாவில், இன்று காலை திருமண தடைகளை நீக்கும் 'சுயம்வரகலா பார்வதி ஹோமம்' வன்னி விநாயகர் திருக்கோயிலில் வேத விற்பன்னர்களின் மந்திர முழக்கங்களுடன் விமரிசையாக நடைபெற்றது. மாலை 'கந்தர்வராஜ ஹோமம்' நடைபெறவுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.