திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த புஷ்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் பேப்பர் மில்லில், கூழ் அரைக்கும் பாய்லரின் உள் பகுதியை சுத்தம் செய்ய இறங்கிய பீகாரைச் சேர்ந்த நூர் அலாம் மற்றும் ராம் புரூஸ் மஞ்சூரி ஆகியோர் விஷவாயு தாக்கி மயக்கமடைந்தனர். அவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து சாமிநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மருதுபாண்டியன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.