பழனி முருகன் கோவிலில் வைகாசி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவிலில் உள்ள ஆனந்தவிநாயகர் சன்னதியில் சிறப்பு யாகம் மற்றும் 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.