திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள திருஆவினன்குடி கோயிலில், சுவாமி அபிஷேகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை தரச் சான்று பெற்ற பால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பக்தர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கால பூஜைகளுக்கு பக்தர்கள் வழங்கும் பால் இனி தரச் சான்று பெற்றால் மட்டுமே அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும்.