பழனி பாலிடெக்னிக் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பழனி பாலிடெக்னிக் கல்லூரியில் சுயநிதி பிரிவில் கல்வி கட்டணத்தை உடனடியாக செலுத்த மாணவர்களை வற்புறுத்துவதாகவும், இதன்மூலம் சுயநிதி பிரிவை மூடும் எண்ணத்தில் இதுபோன்று நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி, கல்லூரி செயலரான திருக்கோவில் துணை ஆணையரை கண்டித்து தமிழ்புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி நிர்வாகத்தின் செயல்கள் கண்டிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி