பழனியில் பைக் திருட்டு - போலீஸார் வழக்குப்பதிவு

திண்டுக்கல் மாவட்டம், பழனி சண்முகபுரம் திருவள்ளுவர் சாலையில் காளான்கடை வைத் திருப்பவர் சந்திரசேகர். இவர், தனது இருசக்கர வாகனத்தை கடை முன் நிறுத்திவிட்டு, வெளியில் சென்று திரும்பி வந்து பார்த்த போது வாகனம் காணாமல் போனது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் அக்கம்பக் கத்தில் உள்ள கடைகளின் சிசிடிவி கேமராவை பார்த்தபோது அடை யாளம் தெரியாத நபர் தனது வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்றது தெரிந்தது. இதுகுறித்து பழனி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி