பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 6ம் நாள் திருவிழாவான வருகிற ஏப்ரல் 10ம் தேதியும், அதனைத் தொடர்ந்து அன்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெறும். பங்குனி உத்திரத் திருதேரோட்டம் ஏழாம் நாள் திருவிழாவான வருகிற ஏப்ரல் 11ம் தேதி வெள்ளிக்கிழமை அன்றும் நடைபெறுகிறது. 14ம் தேதியன்று கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவடைகிறது. கொடுமுடி ஆகிய ஊர்களில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டுவந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் குழு மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல்
ஜெயிலுக்குள் கஞ்சா விற்பனை செய்த சிறை காவலர் சஸ்பெண்ட்