பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 2.36 கோடி கிடைத்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ரூ. 2 கோடியே 36 லட்சத்து 5 ஆயிரத்து 903 ரொக்கம், 500 வெளிநாட்டு கரன்சி, 355 கிராம் தங்கம், 5.961 கிலோ வெள்ளி கிடைத்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீ ஓம் சிவ சேவை குழு தொண்டர்கள், கல்லூரி மாணவர்கள், கோயில் அலுவலர்கள், வங்கிப் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.