பழனி: சாக்கடை தண்ணீர் அகற்ற கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு அருகில் உள்ள மானூர் பள்ளிவாசல் பின்புறம், சாகுல் மளிகை கடை அருகே சாக்கடை கால்வாய் அடைத்து, தண்ணீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அவல நிலை அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிப்பதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி