திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டாரத்தில் நேற்று (நவ.24) காலை முதல் மாலை வரை இடைவிடாமல் கனமழை பெய்தது. இதனால் கோதைமங்கலம் ஜவகர் நகரில் பாப்பாத்தி என்ற மூதாட்டியின் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, பாப்பாத்தி வெளியே சென்றிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.