பழனி, திண்டுக்கல் என கோட்ட அளவில் மேற்பார்வையாளர்கள், கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கால்நடை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கணக்கெடுப்பு பணி இந்த மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு பணி ஏறக்குறைய நிறைவு பெற்றுள்ளது. எனினும் இந்த மாதம் இறுதி வரை கணக்கெடுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் கால்நடை கணக்கெடுப்பு பணி முழுமை பெறும் என்றார்.
தேர்தல் விதிமீறல்: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு