தேனி மாவட்டம் தேக்கம்பட்டியைச் சேர்ந்த முருகன் (44) என்பவர் சில நாட்களுக்கு முன்பு பழனி வரட்டாற்று பாலம் அருகே கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பாலசமுத்திரத்தைச் சேர்ந்த நாகராஜ் (20) மற்றும் மணிகண்டன் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.