அப்பொழுது எதிர்பாராதவிதமாக தண்ணீர் பாய்ந்துகொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சரக்கு வாகனத்தின் முன்பகுதி முழுவதுமாக நசுங்கிய நிலையில் சரக்கு வாகன ஓட்டுநர் கணேசன் உள்ளே சிக்கிய நிலையில் இருந்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருந்தபோதிலும் அவர் ஏற்கனவே விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் விபத்து சம்பவம் குறித்து சாமிநாதபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.