பராசக்திவேல் கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயில் சென்று அம்பு போட்டு, பின் புறப்பாடாகி மலைக்கோயிலுக்கு திரும்பி வரும். அதன்பின்பு ராக்கால பூஜை நடைபெறும். இந்நிகழ்வுகளின் காரணமாக 12ம் தேதி காலை 11. 30 மணிக்கு நடை சாத்தப்படும். அனைத்து தரிசன கட்டண சீட்டுகளும் நிறுத்தப்படும். படிப்பாதை, வின்ச், ரோப்காரில் வரும் பக்தர்கள் காலை 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
மேலும் வரும் 12ம் தேதி வர தங்கரத புறப்பாடு நடைபெறாது நடைபெறாது. 13ம் தேதி மலைக்கோயிலில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவரென பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.