ராஜபாளையம் தொகுதி எம். எல். ஏ-வும், சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ஜெகதீஷ்வரி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வருகை தந்த அவருக்கு கோயில் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து விஸ்வரூப தரிசன சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.